உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறும் 27 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, திருவள்ளூர் உள்பட தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறவுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், 27 மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே