ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல் 2019

அரசியல் மற்றும் அரசு சாரா அமைப்பான ட்ரான்ஸ்பெரென்சி இன்டர்நேஷனல், ஊழல் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை தேசிய அளவில் நடத்தியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை இந்தியா கரெப்சன் சர்வே – 2019 ( India Corruption Survey – 2019 ) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் 20 மாநிலங்களில் உள்ள 248 மாவட்டங்களில், 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற, நகர்ப்புறவாசிகளிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் எந்தளவிற்கு ஊழல் நடைபெறுகிறது என்பது குறித்து பல தரப்பினரும் அளித்த தகவல்களை வைத்து நாட்டின் ஊழல் நிறைந்த மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 51% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை தற்போது காணலாம்.

8-வது இடத்தில் தமிழ்நாடு

  • தங்கள் வேலைகளுக்காக 62% பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக இந்த கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
  • 35% பேர் பல முறையும், 27% ஒரு முறை அல்லது இரண்டு முறையும் லஞ்சம் கொடுத்திருப்பதாக தெரிவித்திருந்த நிலையில்,
  • 8% பேர் மட்டுமே லஞ்சம் கொடுக்காமல் இருந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

7-வது இடத்தில் கர்நாடகா

  • கர்நாடக மாநிலத்தில் சுமார் 63% பேர் தங்கள் வேலைகளுக்காக லஞ்சம் அளித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

6-வது இடத்தில் பஞ்சாப்

  • கர்நாடகம் போலவே பஞ்சாபிலும் 63% பேர் தங்கள் வேலைகளுக்காக லஞ்சம் அளித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
  • 5வது இடத்தில் தெலங்கானாவும் (67%),
  • 4வது இடத்தில் உத்தரப்பிரதேசமும் (74%),
  • 3வது இடத்தில் ஜார்கண்ட் மாநிலமும் (74%),
  • 2வது இடத்தில் பீகாரும் (75%) உள்ளன.

நாட்டிலேயே அதிக அளவாக 78% பேர் லஞ்சம் அளித்திருப்பதாக தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

கோவா, ஒடிசா, கேரளா, ஹரியானா மாநிலங்களில் லஞ்சம் குறைவாக இருப்பதும் இந்த கணக்கெடுப்பின் வாயிலாக தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே