பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்..!!

கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99.

கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் கடந்த 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தவார் கி.ரா. 7-ம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள அவர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாவிட்டாலும் எழுத்தின் மீது கொண்ட பற்றால் சுயமாக எழுத படிக்க கற்றுக்கொண்டார்.

கி.ராவின் எழுத்துகள் அவரை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் உயர்த்தியது.
இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரித்திடும்.

‘கோபல்ல கிராமம் மக்கள்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது மற்றும் இலக்கிய சிந்தனை விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

இவரின் இலக்கிய சேவையை போற்றும் வகையில் நியூஸ்7 தமிழ் கடந்த 2018ஆம் ஆண்டு இலக்கிய ரத்னா விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடதக்கது.

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த கி.ரா, வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே