என் பெயரை தவறாக உபயோகித்து உதயநிதி ஸ்டாலினைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரைத்துறையில் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
அதற்காக அவர் அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.
ஸ்ரீரெட்டியின் போராட்டம் திரைத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதைத்தொடர்ந்து தனது சமூகவலைதள பக்கத்திலும் நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து #METOO புகார்களை பதிவிட்டு வந்தார்.
தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி தமிழில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்டோர் மீது புகார்களைத் தெரிவித்தார் நடிகை ஸ்ரீரெட்டி.
ஆனால் நடிகை ஸ்ரீரெட்டி விளம்பரத்துக்காக இப்படி செய்வதாகக் கூறி சம்பந்தப்பட்டவர்கள் இப்புகார்களை மறுத்தனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பற்றிய அவதூறு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்ரீரெட்டி,
- எனக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.
- என் பெயரை யாரோ தவறாக உபயோகப்படுத்துகிறார்கள்.
- எனக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தின் மீது பெரிய மரியாதை உண்டு.
- என் பெயரை தவறாக உபயோகித்து உதயநிதி ஸ்டாலினைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள்.
- அது என்னுடைய பேஸ்புக் கணக்கு கிடையாது.
- எனது பெயரில் ஃபேஸ்புக்கில் போலியான கணக்குகள் உள்ளன.
- இதுபற்றி நான் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன்.
- என் பெயரை வைத்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.