நடிகர் ரஜினியின் தர்பார் படத்தில் மிகப்பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ள நிலையில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்ததாக அவரின் 168வது படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, காமெடி நடிகர் சதீஸ், சூரி, நடிகர் பிரகாஷ் ராஜ் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தர்பார் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சந்திரமுகி, குசேலன், தர்பார் திரைப்படங்களை தொடர்ந்து ரஜினியுடன் நயன்தாரா இணைந்துள்ளார்.
ஏற்கனவே திரைப்படத்தில் மூன்று நாயகிகள் வலம் வரும் நிலையில், நயன்தாரா என்ன கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
படத்தின் வேலைகளில் தீவிரம் காட்டி வரும் இயக்குனர் சிறுத்தை சிவா முதற்கட்ட படப்பிடிப்பை இம்மாதத்தில் முடித்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.