பணம் இல்லாமல் மனு தாக்கல் செய்ய வந்த கமல் கட்சி வேட்பாளர்..!!

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பத்மபிரியா பணத்தை மறந்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்யவந்தார்.

தமிழகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று முக்கிய அரசியல் தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், சீமான், கமல்ஹாசன், உதயநிதி உள்ளிட்ட பலரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள் வரும் வெள்ளிக்கிழமைதான். அதனால் வேட்பாளர்கள் மனுவை தாக்கல் செய்ய வேகம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளம் வேட்பாளர் பதம்பிரியா இன்று மனுதாக்கல் செய்தார்.

இவர் மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பென்ஜமின், திமுக வேட்பாளர் கணபதியை எதிர்த்து களம் காண்கிறார். யூடியூப் வீடியோக்கள் மூலம் பத்மபிரியா மிகவும் பிரபலம். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

எல்லா ஆவணங்களையும் கொண்டு வந்த அவர் டெபாசிட் பணமான ரூ.10,000 கொண்டு வர மறந்துவிட்டார்.

உடனடியாக அங்கிருந்த மநீம தொண்டர்கள் பணத்தை கொண்டு வந்த கொடுத்த பின்னர் அவர் மனுதாக்கல் செய்தார்.

சமூக வலைதளத்தில் தமிழச்சி என்ற பெயருடன் உள்ள இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அதனால் மதுரவாயல் தொகுதியில் இவர் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவார் என தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே