பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என தலைமைச் செயலாளர் அறிவிப்பு.. முக கவசம் அணிந்தால் மட்டுமே தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் வழிபாட்டுத்தலங்களில் அனுமதி..!!

முக கவசம் அணியாவிட்டால் அபராதம் என கடலூர், சிவகங்கை, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.. வேலூரில் அதிகபட்சம் 500 ரூபாய் வரை அபராதம் விதிப்பு..!!

மகாராஷ்ட்ராவில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி விட்டதாக மத்திய அரசு எச்சரிக்கை.. குஜராத்தில் அகமதாபாத் உள்ளிட்ட 4 பெரும் நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்..!!

தபால் வாக்கு வாக்காளர்களின் பட்டியலை மார்ச் 29-க்குள் அனைத்து கட்சிகளுக்கும் வழங்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விபரங்களை மேற்பார்வை குழுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

பாதாள சாக்கடை மரணங்களுக்கு மாநகராட்சி நகராட்சி ஆணையர்களே பொறுப்பு என உயர் நீதிமன்றம் கருத்து.. சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை தடுத்து நிறுத்தாது ஏன் என்றும் காட்டம்..!!

நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் இயக்க உத்தரவிட முடியாது.. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக கூறி உயர் நீதிமன்றம் முடிவு..!!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே