பாஜக தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது தாயும் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு வந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும், அவரது தாய் மாதவி ராஜே சிந்தியாவுக்கும் தொண்டை வலி மற்றும் காய்ச்சல் இருப்பதால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொண்டை வலி மற்றும் காய்ச்சல் இரண்டுமே கரோன தொற்றின் அறிகுறிகள் என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.