தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 1,685 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,685 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக இன்று 1,243 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 307-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 77 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 16,279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 21,666 ஆண்கள், 13,231 பெண்கள், 17 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,649. வெளி நாடுகள் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 36.