பெண் மருத்துவரை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசியை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட காசியின் வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப், ஹார்ட் டிஸ்க்குகள், ஏடிஎம் கார்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே காசி மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்ததால் அவனை ஏழு நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறை சார்பில் நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் காதல் மன்னன் காசியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
விசாரணை முடிவில் காசியை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.