சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை… மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.43,328க்கு விற்பனை..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.43,328க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராமிற்கு ரூ.42 உயர்ந்து ரூ.5,416க்கு செய்யப்பட்டு வருகிறது. இந்த காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.46 உயர்ந்து ரூ.5,420க்கு விற்பனையானது.

சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த 38 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 6,480 வரை உயர்ந்துள்ளது.

தற்போது தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்துள்ளது நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ரூ.50 ஆயிரத்தை தொடும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே