அன்று… அப்படி செய்தது ஏன்? இஷாந்த் சர்மா விளக்கம்

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையே 2017 ஆம் ஆண்டு பெங்களூரு மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த போட்டியின்போது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா பந்து வீசினார்.

அப்போது ஸ்டீவன் ஸ்மித்தை பார்த்து கேலி செய்யும் வகையில் இசாந்த் சர்மா தனது முகத்தை ஒரு மாதிரியாக கோணலாக வைத்து கிண்டல் செய்தார். இதனை பார்த்த இந்திய வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று தற்போது கூறியுள்ளர் இசாந்த் சர்மா. இதுகுறித்து அவர் கூறுகையில்…. அந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. பேட்ஸ்மேன் கவனத்தைச் சிதறடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என முடிவு செய்துவிட்டேன். இதன் காரணமாக ஸ்டீவன் ஸ்மித்தை ‘அப்செட்’ செய்வதற்காக அவ்வாறு எனது முகத்தை கோமாளிகள் போல் வைத்து காட்டினேன் என்று கூறியுள்ளர் இசாந்த் சர்மா.

Related Tags :

SteveSmith| IshantSharma

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே