பொது முடக்கக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வங்கிக் கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டியை வசூலிப்பது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த வாதத்தை முன் வைத்துள்ளார்.
மேலும், எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு வெவ்வேறாக உள்ளது.
கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கிகளே நமது நாட்டின் பொருளாதாரத்துக்கான முதுகெலும்பு. இவ்வாறு தெரிவித்தார்.