INDvsWI : 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

கட்டாக்கில் நடைபெறும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ஏற்கெனவே நடைபெற்ற முதல் 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலை வகிக்கின்றன.

இந்நிலையில் 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் பகலிரவாக இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே