முகங்கள் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய வீரர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்!

கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள கல்வானில் இந்திய ராணுவத்தினரை சீனா ராணுவத்தினர் கொன்றது மிகக் கொடூர சித்திரவதைக்கு பின்னர் என தகவல் வெளியாகியுள்ளது. சீனா மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதாக இந்திய ராணுவ தரப்பும் தகவல் வெளியிட்டுள்ளது. வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களில் 17 பேரின் முகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆழமான காயம் இருந்துள்ளதாக உடர்கூராய்வில் தெரியவந்துள்ளது.

இதில் மூவரின் முகங்களை கொடூரமாக சிதைத்துள்ளனர். கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் இருவரின் முகங்களில் காயங்கள் ஏதும் இல்லை. ஆனால் இவர்களின் பின்னந்தலையில் இரும்பால் செய்யப்பட்ட ஆயுதத்தால் பலமாக தாக்கியதன் காயங்கள் காணப்பட்டுள்ளது. சந்தோஷ் உள்ளிட்ட 16 பேரின் சடலங்கள் கால்வன் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கொடூர தாக்குதலுக்கு பின்னர் இவர்களை ஆற்றில் தள்ளிவிட்டதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர். 20 ராணுவத்தினரில் 12 பேரும் கால்வன் ஆற்றில் விழுந்து, அதன் கொடுமையான குளிரில் மரணமடைந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே