மத்தியபிரதேச முதல்வராகப் பதவி வகித்து வந்த கமல்நாத் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
மத்தியபிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜக உடன் இணைந்தார்.
இதனால், அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 22 பேர் ராஜினாமா செய்தனர்.
இதனால் ஆளும் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து இன்று மாலை 5 மணி அளவில் ஆளும் கட்சியின் முதல்வர் கமல்நாத் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.
அதற்கு முன் நண்பகல் 12 மணி அளவில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் கமல்நாத் கலந்து கொண்டு தனது ராஜினாமா முடிவை அறிவித்தார்.