சுதந்திர தினத்தையொட்டி, சட்டசபை வளாகம் உள்ளிட்ட அரசின் முக்கிய கட்டடங்கள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.
புதுச்சேரியில் சுதந்திர தின விழா, கொரோனா தொற்று காரணமாக எளிமையாக நாளை (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விழாவையொட்டி, கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம், தலைமை செயலகம், காந்தி சிலை உட்பட, தலைவர்கள் சிலை மற்றும் முக்கிய அரசு கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் கட்டடங்கள், பொதுமக்களை வெகுவாக கவர்கின்றன.