சென்னை: பாலு.. நீ சீக்கிரம் வா என்று தமது நண்பன் எஸ்பிபிக்காக, இளையராஜா உருக்கமாக பேசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அங்கு அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவர் பூரண நலம் பெற்று விரைவில் மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அதில் முக்கியமாக அவரது நண்பரும், இசையமைப்பாளருமான இளையராஜா ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.  நண்பன் பாலு… நீ சீக்கிரமாக எழுந்து வா..! நமது வாழ்க்கை திரையுலகத்தோடு முடிந்துவிடுவது அல்ல… அதையும் தாண்டியது என்று உருக்கமாக பேசி உள்ளார்.

சண்டை இருந்தாலும் சண்டை இல்லாவிட்டாலும் நமது நட்பு தொடரும்.. என இளையராஜா உருக்கமாக பேசி இருப்பது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. நண்பனுக்கான மனம் உருகி கலங்கிய இளையராஜாவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே