#JUSTIN :தொலைபேசி எண், ஆதார்/ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் உடனடி இ-பாஸ்… முதல்வர் அறிவிப்பு!!

ஆதார் அல்லது டேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள இ-பாஸ் நடைமுறையில் வரும் 17ம் தேதி முதல் இந்த தளர்வுகள் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இ-பாஸ் அனுமதி எந்தவித தாமதமும் இன்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க எதுவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

எனவே தேவையற்ற பயணத்தை தவிர்த்து, பொறுப்புடன் நடந்து கொள்ள மக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ஆதார்/ரேஷன் அட்டை நகலுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே