சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் விவரம் (14-08-2020)… மண்டலவாரியாக விவரம்..!!

சென்னையில் கொரோனா தொற்றால் 1,13,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் நேற்று மட்டும் 989 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,384 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,806 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,868 ஆக உள்ளனர்.

மேலும் மண்டலவாரியாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை விவரங்கள் பின்வருமாறு:

திரு.வி.க நகர் – 638,
ராயபுரம் -787,
கோடம்பாக்கம் -1243,
தேனாம்பேட்டை -593,
அண்ணா நகர் -1151,
தண்டையார் பேட்டை -543,
வளசரவாக்கம்- 867,
அம்பத்தூர் – 1,563,
அடையாறு- 1077,
திருவொற்றியூர்- 283,
ஆலந்தூர் – 568,
பெருங்குடி – 440,
மாதவரம் – 479,
சோழிங்கநல்லூர் – 435,
மணலி – 107.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே