இடுக்கி நிலச்சரிவு… 3ம் நாளாக தொடரும் மீட்பு பணி… பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!!

கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான 38 பேரை தேடும் பணி 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தி்ல், மூணாறு அருகேயுள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் அதி கனமழையால், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. தொழிலாளர் குடியிருப்பு முகாமில் தங்கியிருந்த 80-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கேரள காவல்துறை, தீயணைப்புத்துறை, தன்னார்வலர்கள், உள்ளூர் மக்கள் என பல்வேறு தரப்பினரும் 3ம் நாளாக தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 26-ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிருடன் மீட்கப்பட்ட 12-க்கும் மேற்பட்டோர் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மத்திய இணை அமைச்சர் முரளீதரன் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே