மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் மூணாறு ராஜமலை பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து இடுக்கி ராஜமலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகின.
மேலும், மண்சரிவில் சிக்கிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும்,10 பேர் இடிபாடுகளிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து, தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 80 பேர் மாயமானதாக தகவல் வெளியகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இருப்போர் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து தேயிலைத் தோட்டப் பணிக்குச் சென்றவர்கள் என்றும், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த இரு நாட்களாக கொட்டித் தீர்த்துவருகிறது. குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே கனமழை விடாது பெய்து வருகிறது.
இந்நிலையில் மூணாறு கிராமப் பஞ்சாயத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் ராஜமாலா வார்டு இருக்கிறது. இங்குள்ள நேமக்கடாவில் உள்ள பெட்டிமடா பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து 80-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.