மனைவி இல்லாத போது சிறுமியை மறுமணம் செய்து கொண்ட கணவன்! ஊருக்கு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில் முதல் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டு சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவருடன் ஓட்டம் பிடித்த இளைஞனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிப்லபா மாலிக். இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் மாலிக்குக்கு வேலை கிடைத்த நிலையில் மனைவியுடன் அவர் அங்கு சென்றார்.

இதனிடையில் ஒடிசாவில் தனிப்பட்ட வேலை இருப்பதாக கூறிவிட்டு மனைவியை ஹைதராபாத்தில் விட்டு மாலிக் ஒடிசா வந்தார். சில மாதங்களில் சி றுமி ஒரு வருடன் மாலிகுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கணவரிடம் இருந்து எந்தவொரு தகவலும் வராததால் அவரின் முதல் மனைவி ஒடிசாவுக்கு வந்தார். இதையறிந்த மாலிக் தனது இரண்டாம் மனைவியுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

கணவர், சிறுமியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதோடு ஊரை விட்டு ஓடியதையும் அறிந்து அ திர்ச்சியடைந்த மனைவி அவர் வீ ட்டு வா சலில் சென்று உட்கார்ந்து சாப்பிடாமல் போராட்டம் செய்தார்.

அப்போது கணவர் திரும்ப வந்து தன்னுடன் வாழ வேண்டும் என கூறினார், இந்த சம்பவம் குறித்து த கவ லறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே