குடும்பச் சொத்துப் பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும்போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
2005-ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு பெற்றது. அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்ணியம் போற்றுபவர்கள் மத்தியில் ஆதரவு கரம் பெறப்பட்டது.
இதனையடுத்து, இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த தீர்ப்பை வரவேற்றார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டதாவது, “நாட்டின் அனைத்துத் தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர தீர்ப்பு அடித்தளம் அமைக்கும், சொத்தில் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென கடந்த 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞரின் நகர்வின் மூலம் திமுகவுக்கு கிடைத்த வெற்றி இதுவாகும்” என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.