இந்தியாவில் வாட்ஸ் அப், பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது: ராகுல் காந்தி..!!

இந்தியாவில் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்வதாக கூறியுள்ளார். ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பேஸ்புக் பக்கத்தில் உள்ள பாஜக தலைவர்களின் மோசமான பதிவுகளை, வெறுப்பு பேச்சுகளை அந்நிறுவனம் கண்டுகொள்வதில்லை என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பான செய்தியை பகிர்ந்து ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே