பொதுமுடக்கத்திலும் நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு : மு.க.ஸ்டாலின் புகார்

பொதுமுடக்க நேரத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான நெடுஞ்சாலைத் துறையின் முறைகேடுகள் உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகி இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் 462 கிலோமீட்டர் நீள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை ஐந்து வருடங்கள் பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டது.

உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட வில்லை என ஒப்பந்ததாரர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு வை மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாணையின் உள்ள பணியின் ரூபாய் மதிப்புக்கும், டெண்டரில் உள்ள பணியின் ரூபாய் மதிப்புக்கும் வேறுபாடு இருக்கிறது என மனுதாரர் கூறி இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுமுடக்கம் அமலில் இருக்கும்போது சாலை பராமரிப்புக்காக ஐந்து வருட பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கு துறை அமைச்சராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசரம் காட்டியது ஏன் என அவர் வினவியுள்ளார்.

இந்த வழக்கை நிச்சயம் உயர் நீதிமன்றம் விசாரிக்க தான் போகிறது என்றும் அப்போது டெண்டர் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரத்தான் போகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எந்த ஊழலில் இருந்தும் யாரும் தப்பி விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

டுவிட்டரில் அவர் பதிவிட்டு இருப்பதாவது:

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே