காவலர்களுக்கு FACE SHIELD எனப்படும் முழு முகக்கவசம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் முகத்தை மறைக்கும் ஷீல்டு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவி வரும் சூழலில் முன்னெச்சரிக்கையாக போலீசாரின் முழு முகத்தையும் மறைக்கும் ஷீல்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் போலீசார், முகத்தை மறைக்கும் ஷீல்டு பயன்படுத்துவதை மாவட்ட எஸ்.பிக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கொரோனா தொற்று காலத்தில் களத்தில் இறங்கி பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப்பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு உடைகள் முகக்கவசங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி நீதிமன்ற கிளை வரைவுக்குட்பட்ட 8 மாநகராட்சிகளில் அமல் படுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இதே முறையை தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் அமல்படுத்துவது குறித்து ஆணையர் உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல, முன்களத்தில் நின்று பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முகக்கவசங்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே