தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நாகப்பட்டினம், சிவகங்கை, புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே