விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்தார் குரு பகவான்

குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனது சொந்த வீடான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.

இதையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நவகிரகங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும் நற்பலன்களைத் தரக்கூடிய கிரகமான குருபகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இட பெயர்ச்சி ஆவார்.

இது குரு பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, நவகிரகங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்கும் திருவாரூர் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், குரு பகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதையடுத்து, அதிகாலை 3.45 மணிக்கு குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார்.

குரு பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையொட்டி ஐநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடிநீர் மையங்கள், கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே