குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.

64 வயதான விஜய் ரூபானி, குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் வதோதராவின் நிஜம்புரா பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நேற்று பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் தொடர்ந்து உரை நிகழ்த்தினார். அப்போது திடீரென மேடையிலேயே அவர் மயங்கி விழுந்தார்.

இந்நிலையில், அவர் யு என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரூபானியின் மாதிரி ஞாயிற்றுக்கிழமை இரவு சேகரிக்கப்பட்டு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு அனுப்பப்பட்டது. 

இதைத்தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே