டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..!!

டெல்லியில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 38வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் ஜிஎஸ்டி வரியால் 1 லட்சத்து மூவாயிரத்து 492 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

இது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின், கிடைத்த 3வது அதிக வசூல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மத்திய அரசு திட்டமிட்ட இலக்கை, ஜிஎஸ்டி வரி வசூல் இன்னும் எட்டவில்லை என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே