இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தை ஆறு மாதத்துக்கு முன்னரே அந்நாடு அதிபர் கோத்தபய ராஜபக்சே கலைத்து உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அமைக்கப்பட்டது.

இந்த அமைச்சரவையின் காலம் வரும் ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும்நிலையில், முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை பிரதமராக அதிபரின் சகோதரர் மகிந்த ராஜபக்சே இருந்துவருகிறார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு காபந்து அரசின் தலைவராக மகிந்த ராஜபக்ச தொடர்வார்.

அமைச்சர்கள் அதிகாரத்தை பதவியையும் இழப்பார்கள்.

இதுதொடர்பாக இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில், இலங்கை நாடாளுமன்றம் நான்கரை ஆண்டுகளை இன்றுடன் நிறைவு செய்கிறது.

தேர்தலை நடத்துவதற்காக நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் 25-ம் தேதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே