தங்கத்தின் விலையில் மீண்டும் சரிவு.. சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.40,568க்கு விற்பனை..!!

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்தது. இதையடுத்து ஒரு சவரன் தங்கம் ரூ.40,568க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5,071க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 23ம் தேதி முதல் உயர தொடங்கிய தங்கம் சவரனுக்கு 11,712 வரை உயர்ந்தது.

மேலும் கடந்த 7ம் தேதி ஒரு சவரன் 43,328க்கு விற்பனையாகி வரலாற்று சாதனை படைத்தது. அதன் பிறகு கடந்த வாரம் முதல் தங்கம் விலை அதிரடியாக குறைந்து வந்தது.

சுமார் 5 நாட்களாக சரிவை கண்ட தங்கம், கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு கிராம் 5,076க்கும், சவரன் 40,608க்கும் விற்கப்பட்டது. அதேசமயம் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை அதிகரித்தது.

கிராம் 24 அதிகரித்து ஒரு கிராம் 5100க்கும், சவரனுக்கு 192 அதிகரித்து ஒரு சவரன் 40,800க்கும் விற்கப்பட்டது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றமின்றி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,800ஆக இருந்து வந்தது.

இந்த நிலையில், வர்த்தக தொடக்கத்தின் முதல் நாளான இன்று, தங்கம் விலை சவரன் ரூ.232 குறைந்து ரூ.40,568க்கு விற்பனையாகிறது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே