முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. இவருக்கு 84 வயதாகிறது.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு மூளையில் ரத்தக்கட்டு இருந்ததை அறிந்து அதனை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பிறகு பிரணாப் முகர்ஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், செயற்கை சுவாச கருவியுடன் உடல் நிலை சீராக உள்ளதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே