டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
பிரணாப் முகர்ஜிக்கு, கடந்த 10ம் தேதி, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. மேலும், பிரணாப் முகர்ஜியின் மூளையில், ரத்தக்கட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை மூலம், ரத்தக்கட்டு அகற்றப்பட்டது.
அவரது உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் காணப்பட வில்லை. தீவிர சிகிச்சை பிரிவில், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சீராக உள்ளன என்று மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது.
இந் நிலையில் இது குறித்து, பிரணாப் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது: எனது தந்தை, கவலைக்கிடமான நிலையில் உள்ளார். ஆனாலும், அவரது உடல்நிலை மோசமடையவில்லை. வெளிச்சம் பட்டால், கண்களை சுருக்கி கொள்கிறார் என்று கூறி உள்ளார்.