இந்திய வான்பரப்புக்குள் ரஃபேல் போர் விமானங்கள் நுழைந்திருக்கின்றன. இந்த விமானங்களூக்கு ரேடியோ சிக்னல் மூலம் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்தியாவுக்கான 5 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் அனுப்பி வைத்திருக்கிற்து. சுமார் 7,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் மேற்கொண்டு ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வருகின்றன.
இன்று பிற்பகல் ரஃபேல் போர் விமானங்கள் இந்திய வான்பரப்பில் நுழைந்தன. அப்போது ரேடியோ சிக்னல்கள் மூலம் ரஃபேல் விமானங்களுக்கு உற்சாக வரவேற்பலிக்கப்பட்டது.
இந்த போர் விமானங்கள் இன்னும் சற்று நேரத்தில் ஹரியானாவில் அம்பாலா விமானப் படை தளத்தில் தரை இறங்க உள்ளன.