நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு :
நிதியமைச்சர் அறிவித்த சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள், சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறையில் மாற்றத்தக்க வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த நடவடிக்கைகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கும். பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவும்.
கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும். மாநிலங்களின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.