அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிரப் புயலாக மாறப்போகும் ஆம்பன் புயல்

ஆம்பன் புயல் இன்று இரவோ அல்லது நாளை காலையோ அதி தீவிர புயலாக வலுபெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஆம்பன் புயலின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு கோவை, தர்மபுரி, கிருஷ்ணபுரி, சேலம், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசான முதல் மிதமான மழையும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன்கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும அதனை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டல் நேற்று மாலை அம்பான் புயலாக வலுப்பெற்று வடக்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தீவிர புயலாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் வலுவடைந்தது.

இது இன்று இரவோ அல்லது நாளை காலையோ அதி தீவிர புயலாக வலுபெறக்கூடும்.

இதன் காரணமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 80-90 வரையிலும் இடையிடையே 100 கி.மீ., வரையிலும் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் வரும் 20ஆம் தேதி வரை மேற்கூறிய பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வட தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே