3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், தற்போது 4ஆம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.
அதில், செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும்; திறந்த வெளி திரையரங்கம் செப்டம்பர் 21ம் தேதி முதல் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.