மத்திய அரசு தளர்வுகளுடன் அறிவித்த ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தற்போது அன்லாக் 4.0 குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்ச்சிகளை 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி நடத்தலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 21ஆம் தேதி முதல் திறந்தவெளி கலையரங்குகள், திறந்தவெளி திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் விரும்பினால் பள்ளி செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.