இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்

இன்று(மே 14) மாலை 4 மணிக்கு நிருபர்களை சந்திக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய சலுகைகளை அறிவிக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம்(மே 12), ‘டிவி’ மூலம், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது, ‘பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும்’ என்றார். ‘இந்த அறிவிப்புகளை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்து வரும் நாட்களில் வெளியிடுவார்’ என்றும் கூறினார்.

இதன்படி நேற்று டில்லியில் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு 3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நிருபர்களை சந்திக்க உள்ள நிர்மலா சீதாராமன், புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே