பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான அவகாசம் நீட்டிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் வரும் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகைக்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

ஜனவரி 9 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதிக்குள் அதனை வினியோகம் செய்யவும், விடுபட்டவர்களுக்கு 13 ஆம் தேதிக்குள்ளும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வரும் 21 ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே