பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது கரோனா தொற்றால் தள்ளிப்போய் இருந்தது.
மார்ச் , ஏப்ரல் மாதமே முடிந்திருக்க வேண்டிய பொதுத்தேர்வுகள் அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தள்ளிப் போயிருக்கிறது.
இந்நிலையில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வை 9.5 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அரசு இணையதளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வரும் 31ஆம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது.
இப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில், அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அவருடைய பதிவில்,
ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.
மக்களின் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.