உலகம் முழுவதும் பல கோடி பேர் டிக்-டாக் பயன்படுத்தி வருகின்றனர். இந்த டிக் டாக் மூலம் பல மோசமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
டிக்-டாக்கில் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு விபரீதமான செய்திகள் பல இடங்களில் நடந்துள்ளது.
தற்போது சமூக வலைத்தளங்களில் #BanTikTok என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பெரும்பாலும் வட இந்தியர்கள் செய்யும் அட்டூழியம் டிக்-டாக்கில் வடக்கன் என்னும் ஹாஷ் டேக்-ல் ட்ரெண்டாகி வருகிறது.
புதுசு புதுசாக உட்கார்ந்து யோசிக்கும் இந்த பல பாலோவர்களை கொண்டுள்ளனர்.
சமீபத்தில் டிக்டாக் பிரபலமான பைசல் என்பவன் பெண்கள் முகத்தின் மீது ஆசிட் அடிக்கும் சித்திகரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை பைசல் சித்திக்கி எனபவன் பதிவித்துள்ளான்.
டிக்டாக்-ல் 1.3 கோடி பேர் இவனை பின்தொடர்கின்றனர்.
இது சமூக வலைத்தளத்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களை வைத்துக்கொண்டு டிக்டாக் பிரபலமாக வலம் வரும் இப்படி ஒரு நபர் ஆசிட் அடித்து அதை ஊக்குவிக்கும் விதமாக செய்த வீடியோ ட்விட்டரில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் #Bantiktok என்ற ஹாஷ்டேக்-ஐ ஊடகங்களில் பெரியளவில் பேச்சு பொருளாக உருவெடுத்துள்ளது.
ஆசிட் அடிப்பது குற்றமென அரசாங்கம், பிரபலங்கள் என பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் டிக்-டாக் தடை செய்ய வேண்டும் என சமூகவலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இந்த விபரீத வீடியோ பலரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.