ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் அதிமுகவும், திமுகவும் தலா 13 மாவட்ட கவுன்சில்களை வென்றுள்ளன.
27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட எண்ணப்பட்டு ரிசல்ட் அறிவிக்கப்பட்டு விட்டன.
இன்னும் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெறாமல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் 13 மாவட்டங்களை திமுகவும், 13 மாவட்டங்களை அதிமுகவும் கைப்பற்ற இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
- கோவை,
- சேலம்,
- தருமபுரி,
- கடலூர்,
- ஈரோடு,
- கன்னியாகுமரி,
- கரூர்,
- நாமக்கல்,
- தேனி,
- திருப்பூர்,
- தூத்துக்குடி,
- அரியலூர்,
- விருதுநகர் மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி கைப்பற்றுகிறது.
- மதுரை,
- நீலகிரி,
- திண்டுக்கல்,
- பெரம்பலூர்,
- கிருஷ்ணகிரி,
- நாகை,
- தஞ்சை,
- திருவாரூர்,
- புதுக்கோட்டை,
- திருவண்ணாமலை,
- திருவள்ளூர்,
- ராமநாதபுரம்,
- திருச்சி மாவட்ட கவுன்சில்களை திமுக கூட்டணி கைப்பற்றுகிறது.
சிவகங்கை மாவட்ட கவுன்சிலுக்கு மட்டும் இழுபறி நீடிக்கிறது.