திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் அமலாக்க துறையினர் விசாரணை

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று உள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் நேற்று அனுமதி வழங்கினார்.

ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்திய பிறகு, தேவைப்பட்டால் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்யலாம் எனவும் தன்னுடைய உத்தரவில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்றுள்ளனர்.

சிதம்பரத்தை காண அவருடைய மனைவி நளினி மற்றும் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் திகார் சிறைக்கு சென்றுள்ளனர்.

இதனிடையே, சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நாளையுடன் நிறைவடைகிறது.

அதே நேரத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைதுக்கு எதிராக சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மதியம் 2 மணிக்கு வர உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே