அடுத்த 3 மாதங்களுக்கு EMI வசூலிக்கப்படமாட்டாது – தமிழக நிதித்துறை செயலாளர்

அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படமாட்டாது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து கடைகளும், பேருந்து, ரயில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைமைச்செயலகத்தில் தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அளித்த பேட்டியில், அடுத்த 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ வட்டி உள்ளிட்டவை வங்கிகளால் வசூலிக்கப்படமாட்டாது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை வங்கி வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே