சூர்யாவின் அடுத்த இயக்குநர் வசந்தபாலன்?

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் ‘வெயில்’, ‘ அங்காடித் தெரு’ ‘காவியத் தலைவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வசந்த பாலனிடன் கதை கேட்டிருப்பதாகவும், அது புராணம் சம்பந்தப்பட்ட கதை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “ இயக்குநர் வசந்தபாலன் சூர்யாவைச் சந்தித்து கதை கூறியிருக்கிறார். புராணம் சம்பந்தப்பட்ட அந்த கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போக, அதனை வரும் காலத்தில் செய்யலாம் என சூர்யா கூறியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, அடுத்ததாக வெற்றி மாறன் இயக்கத்தில்  ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அதனைத்தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில்  ‘அருவா’ படத்தில் நடிக்க இருக்கும் சூர்யா அதனைத்தொடர்ந்து இந்தக் கதையில் பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெயில்’படத்தை இயக்கி அதன் வெளியிட்டிற்கு தயாராக இருக்கும் வசந்தபாலன், தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து ஒரு புதியப்படத்தை தயாரிக்கிறார்.  ‘கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்த அர்ஜூன்தாஸ் இந்தப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே