உடம்புல அதிகம் அமிலம் தங்காம இருக்க ஆல்கலைன் உணவு சாப்பிடணுமாம், அது இதுல தான் இருக்கு!

உண்ணும் உணவுகள் இனிப்பு, கார்ப்பு, கசப்பு என்று வகைப்படுத்துவதுண்டு. ஆனால் அது கார உணவு மற்றும் அமிலம் நிறைந்த உணவு என்று இரண்டு பிரிவாகவும் உண்டு. இது ஒன்றும் தனிச்சுவை அல்ல, இவை உணவின் தன்மையை குறிக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் இவை இரண்டுமே சமநிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக அமிலத்தன்மை அதிக கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அமிலம் என்பதை ஆசிட் என்று அழைக்கிறோம். பலருக்கும் பிடித்த காரத்தன்மை கொண்டிருக்கும் உணவுகள் தான் ஆல்கலைன் என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து பார்க்கலாம்.
​சமநிலை உணவுகள்
நாம் உண்ணும் உணவில் இருக்கும் சத்துகளை உடைக்க இரைப்பை ஆனது அமிலங்களை சுரக்கிறது.வயிற்றில் பிஹெச் அளவு சமநிலையில் இருக்கும். அதாவது 2. 0 முதல் 3. 5 வரை அமிலத்தன்மை கொண்டிருக்கும். இது செரிமானம் சீராவதற்கு அவசியமானது. ஆனால் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் உணவில் அமிலத்தன்மை அதிகரித்து அவை இரைப்பை நோய்களை அதிகரிக்க செய்கிறது. அதோடு இதயம், கல்லீரல், சிறுநீரகம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது.
மாறிவரும் சூழலில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீது அதிக மோகம் கொண்டிருக்கிறார்கள் மக்கள். பீட்சா, பர்கர், சமோசா சாண்ட்விச், பேக்கரி உணவுகள், மைதா, பதப்படுத்தப்பட்ட உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவை பெரிய அளவிலான அமில உணவுகளை கொண்டிருப்பதால் இந்த உணவுகள் உங்கள் வயிற்று பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாகிறது.

அதே நேரம் அமிலத்தன்மை கொண்டிருக்கும் சிட்ரஸ், தயிர், இயற்கையில் விளைந்த பழங்கள் கார விளைவைக் கொண்டிருப்பதால் இவை உடலுக்கு ஊறு செய்யாது. அதனால் உணவுகளை ஆரோக்கியமாக எடுத்துகொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் நல்ல சீரான உணவை உட்கொள்ள வேண்டும். அந்த வகையில் கார உணவுகள் அமிலத்தன்மை மற்றும் அமிலரிஃப்ளக்ஸ் அபாயங்களை எதிர்கொள்ளவும் உதவுகின்றன. குறிப்பிடத்தக்க வகையில் இந்திய பாரம்பரிய உணவுகள் சீரான கார உணவை அதிகம் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் காரத்தன்மை கொண்ட நன்மை செய்யும் உணவுகளை பார்க்கலாம்.

​சிட்ரஸ் பழங்கள்
அமிலம் நிறைந்த பழம் என்பதால் இவை உடலில் அமிலத்தை உண்டாக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் இவை உடலில் காரத்தன்மையை உண்டாக்கும் பொருள். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் அமிலத்தன்மையை உண்டாக்குவதில்லை. இவை அசிடிட்டி என்னும் நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு காரணமானவற்றை அழிக்க உதவுகிறது.

செரிமான மண்டலம், சிறுநீரகக் கற்கள், உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைகளை தடுக்க உதவுவதோடு சிட்ரஸ் பழங்கள் யூரிக் அமிலத்தை சிறுநீரில் வெளியேற்றும் தன்மை கொண்டவை.. கூடுதலாக இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. திராட்சையில் நிறைந்திருக்கும் ஊட்டசத்துகள் இதய நோய் மற்றும் புற்றுநோயில் இருந்து காக்கிறது.

​உலர் பருப்புகள்
உண்மையில் இவை பசி அடக்கும் திறனை கொண்டவை. இவை உடலினுள் கார விளைவை உண்டாக்குகின்றன. குறிப்பாக பாதாம். நாம் அன்றாடம் சாப்பிட வேண்டிய கொட்டை வகையில் இதற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்தும் தாதுச்சத்துகளும் இதில் உண்டு.

பாதாமில் உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், ஒமேகா -3, ஒமேகா -6 போன்றவை ரத்த கொழுப்பின் அளவை சீராக்கி இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் இதில் வைட்டமினி, பி, துத்தநாகம், இரும்புச்சத்து, சுண்ணாம்பு, தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்றவையும் உண்டு. தினசரி உணவில் 4 பாதாம் கொட்டையாவது அவசியம். இவை கலோரிகள் நிறைந்தவை என்பதால் அதிக அளவு எடுத்துகொள்ள வேண்டாம்.

​இஞ்சி -பூண்டு- வெங்காயம்
இவை இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இதை அதிகம் அன்றாட உணவில் எடுத்துகொள்கிறோம். இவை உணவில் சுவையை கூட்ட மட்டுமே பயன்படுத்துவதில்லை. உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

தினசரி பூண்டு சேர்த்த சூப், இஞ்சி கலந்த தேநீரி, காய்கறி சாலட்களில் வெங்காயம் போன்றவை உடலுக்கு அதிக பலத்தை தரக்கூடும். இவை காரத்தன்மை கொண்டவை என்பதால் இவை உடலில் சேரும் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தி உடலுக்கு நன்மை செய்ய உதவுகிறது.

​பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலைகளை கொண்ட காய்கறிகள் காரத்தன்மை கொண்டவை. கீரைகள் உடலுக்கு செய்யும் நன்மைகளால் தான் அடிக்கடி கீரை சாப்பிட வலியுறுத்துகிறார்கள். பச்சை நிறம் கொண்ட ப்ரக்கோலி மற்றும் காலிஃப்ளவர் இரண்டுமே உடலுக்கு நன்மை செய்ய கூடியவை. இதில் உடலுக்கு தேவையான ஃபைட்டோ கெமிக்கல்கள் உண்டு.

​முட்டை கோஸ்
காய்கறிகளில் முட்டைகோஸ் குறைந்த கொழுப்பு தன்மை கொண்டது என்பதால் டயட் மேற்கொள்பவர்களுக்கு சிறப்பாக உதவும். காரத்தன்மை கொண்டிருக்ககூடியவை இது புற்றுநோய் உண்டாகும் தாக்கத்திலிருந்து நம்மை விடுபட செய்கிறது. அதிக நார்ச்சத்து நிறைந்த இவற்றில் கால்சியம். பாஸ்பரஸ், ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.

​வேர் காய்கறிகள்
இனிப்பு உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, தாமரை தண்டு வேர், பீட்ரூ, கேரட் எல்லாமே காரத்தன்மை கொண்டவை. ஆனால் இதை அதிகமாக வேகவைப்பதன் மூலம் பாதிக்கும் மேற்பட்ட சத்தை இழந்துவிடுகிறது. இதன் மருத்துவ குணங்களை முழுமையாக பெற வேண்டுமெனில் இதை அப்படியே நறுக்கி சாலட் போல் செய்து சாப்பிட வேண்டும்.
அரை வேக்காடாக ஆவியில் வேகவைத்து சூப், சாலட் போன்றும் எடுத்துகொள்ளலாம். இவையெல்லாம் அன்றாட உணவில் அடிக்கடி சேர்த்து வந்தாலே உடலில் அமிலத்தன்மை சீராக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே