குடியுரிமை சட்டத்தை வரவேற்கிறாரா? எதிர்க்கிறாரா? ரஜினிகாந்துக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி

பெரியார் பற்றி பேசுவதற்கு முன், குடியுரிமை திருத்த சட்டத்தை வரவேற்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பதை ரஜினிகாந்த் விளக்க வேண்டுமென, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம், இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிரான திட்டம் என கூறினார்.

அனைவரையும், ஹிந்தி மற்றும் இந்துத்துவா அடையாளத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்ற முயற்சிதான் இது எனவும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

மேலும், பெரியாரைப் பற்றி பேசுவதை விடுத்து, தற்போது நடைபெறும் அரசியல் நிகழ்வுகளுக்கு ரஜினிகாந்த் கருத்து சொல்ல வேண்டும் எனவும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே